புதன், 29 ஆகஸ்ட், 2012

தாய் நாட்டு சுதந்திரம்....



சும்மா வரவில்லையே இந்த
இனிய சுதந்திரம் இங்கே...

இதுகூட தெரியவில்லையே
இன்னும் நம்மில் சிலருக்கிங்கே...

கணக்கில்லா எவ்வளவோ மக்கள்
வாழ்ந்திருந்தனர் இங்கே...
அதிலும் தன்னையே இழந்தவர்கள்
ஒருசிலர்தானே இங்கே...
சுதந்திரம் என்பதே தியாகத்தால்
மட்டுமேதானே சாத்தியமிங்கே...

எத்தனை எத்தனை தியாகிகள்
நம்மிடையே அன்று பிறந்தும்...
சுதந்திரம் என்ற சுவாசத்தை
எல்லோரும் சுவாசிக்க நினைந்தும்...  
அதற்காக தன் பொன்னான இன்பமெனும்
நல்வாழ்வுதனை இழந்தும்...
இன்றும் நம் உள்ளத்தில் இறவாமல்
வாழ்கின்றனரே இறந்தும்...
அவர்களை நினைவு கூறா
மனிதர்கள் இறந்தவர்களே இருந்தும்...

சுதந்திரம் வேண்டும் என்று ஒரு
சிலர் யோசித்த பிறகுதானே...
பொய்யான மெய்யெனும் உடம்பு
வெந்ததின் விளைவுதானே...
நாட்டின் மீதுள்ள பற்றெனும்
உணர்ச்சி பொங்கியதால்தானே...
எண்ணில்லா நம்மவர்கள் தானாக
முன்னெழுந்து வந்ததால்தானே...
நிம்மதியாய் நாம் இருக்கின்றோம்
இத்தனைக்கும் பின்புதானே...

போராடும் முறையில் தான்
எண்ணற்ற வேறுபாடுகள் பிறந்தது...
வெற்றியின் நோக்கம் என்னவோ
ஒன்றுக்குத்தானே இருந்தது...
வீரமுழக்கம் செய்த நம் தீரர்களின்
பேச்சில் அணலும் பறந்தது....
தணலில் கருகிய பரங்கியர் கூட்டம்
மண்ணை கவ்வியே போனது...
பொறுமை எனும் அஹிம்சா
சக்திதானே இறுதியில் வென்றது...

*************************************************************************
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*************************************************************************

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கைவிடாதே பெற்ற தெய்வங்களை...

ஆண் மகனாய் பிறந்துவிட்ட
எனதருமை சிங்கங்களே...
உங்களுக்காக உங்களிடம்
உங்களை பற்றி பேசவந்துள்ளேன்.....
உலகிற்கு உனை அறிமுகப்படுத்திய
பெற்றோர்களை நீயும்
பரிதவிக்க முதியோர் இல்லத்தில்
விடுவதும் நியாயம்தானா...

உனக்கு சுவாசம் தந்த அன்னையின்
சுவாசம் இருக்கும்வரையாவது
அந்த கண்கண்ட தெய்வத்தின்
காலடியே கதி என்று கிடந்துவிடு....
தத்தி தத்தி நீ நடந்த அழகை
ரசித்து பார்த்த உன் பெற்றோர்கள்   
தள்ளாத வயதில் நடப்பதை
உடன் இருந்து பார்க்கவேண்டாமா...

பிறக்கும்போது உன்னோடு பிறந்த
மனசாட்சி என்ற ஒன்றும்
எப்படியடா நீ உயிருடன்
இருக்கும்போதே இறந்து போனது ...
மனசாட்சி இல்லாதவனை
மனிதனென்றே ஏற்காதே இவ்வுலகம்
பாவம் உனக்கெங்கே தெரியப்போகிறது
மனிதனாய் நீ இருந்தால்தானே....

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு செய்ததை
ஒருபோதும் சொல்லி காட்டுவதில்லை
சொல்லிக்காட்டுவதற்கு கூட பிள்ளைகள்
பெற்றோருக்கு செய்வதில்லையே..
ஔவை பாட்டியோ இப்போது
இருந்திருந்தால் கொடுமையின்
உச்சம் என்று இதனையல்லவா
வரிசைப்படுத்தி பாடியிருப்பாள்...

நம்செம்மொழிக்கு சொந்தமான
முருகக்கடவுளையே நிற்கவைத்து
கேள்விகேட்ட ஔவைபாட்டி இந்த
பிள்ளைகளை விட்டா வைத்திருப்பாள்....
தமிழால்
சொல்லால் வசைபாடியே
கொல்லாமல் வதைத்திருப்பாள்
பெற்றோர்களை விலக்கிவைத்து விட்டு
எப்படியடா உன்னால் நிம்மதியாக
உறங்கத்தான் முடிகிறது...

ஒருசிலர் சொல்கிறார்களே சோமபானம்
சுராபானம் என்று அதனை பருகிவிட்டா
நித்தமும் நீ நித்திரையை தழுவுகின்றாய்....
பால் குடித்த மிருகம் என்று

உனையும் சொன்னால்
உண்மையான மிருகங்களும்
என்மேல் கோபம் கொள்ளுதடா.....

இப்படி ஒரு ஈனப்பிறவியை
எங்களோடு ஒப்பிடாதே என்று....
எத்தனை ஜென்மம் நீ எடுத்தாலும்
செய்த இந்த பாவத்திற்கு
மன்னிப்பு கிடையாது என்பதே
சத்தியமான உண்மையடா - இருந்தும்
மன்னித்து ஏற்கும் ஒரே தெய்வம்
அதுவும் உன் அன்னைதானடா...
பெற்றோர்களுடன் வாழ்ந்து இறுதிவரை
மனிதனாக இருந்து விடு....



==============================================================

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தமிழ் வலைப்பதிவர்களின் முதல் சங்கமம்...


வரலாற்றிலொரு சிறப்புமிகு பொன்னாளாம்
தமிழ் வலைப்பதிவர்களின் திருநாளாம்...
சந்தோஷ கடலில் பதிவர்கள் மிதந்த நாளாம்...
பதிவர்களோடு ஏனையோரும் மகிழ்ந்த நாளாம்...
ஆவணி மாதம் பத்து  என்பதே அந்த சுபநாளாம்...

இனி வருமா அதுபோன்றவொரு நன்னாளே...
எத்தனை வந்தாலும் அவை இதனுக்கு பின்னாலே...
நிகழ்ச்சி இப்படி சிறக்குமென்று யாரும் எண்ணாமலே...
மிக அற்புதமாய் முடிந்தும்  போனது  நண்பர்களாலே...
இத்தனையும் சாத்தியமானது தமிழ்வலைகளாலே...

பதிவர்களின் திருநாளில் மேலும் ஒரு சிறப்பாக ...
கவிதாயினி சசிகலா தன் எண்ணங்களை எழுத்தாக...
வடித்தார்கள் முடிவில் உருவானதோ நல்தென்றலாக...
தென்றலெனும் கவிதை நூலும் வெளிவந்தது சிறப்பாக...
வெளியிட்டவரோ பட்டுக்கோட்டை பிரபாகர் அழகாக...