சனி, 4 செப்டம்பர், 2010

மனதில் நிறுத்துவதற்கு சில !

தாய் தந்தையை  காப்பாற்று
உடன் பிறந்தோர்க்கு செய்வதற்கு
துளியும் யோசிக்காதே !
மனைவி, மக்களை நேசி
உண்மையான நண்பர்களை தேர்ந்தெடு
நம்பிக்கையுடன் பழகு !
நன்றி மறவாதே

ஒரு வேளை உணவிட்டாலும்
அவர்களை உன் உயிர்
உள்ளவரை மறவாதே !
காட்டிக் கொடுக்காதே
பொய் சொல்லாதே
பிறர் நலன் கருதி பொய் சொல்
அது உண்மைக்கு சமமானது

பெற்றோர், உடன்பிறந்தோர்,நண்பர்கள்
இவர்களிடம் கெளரவம் பார்க்காதே !
உன்னில் சிறியவனிடம்
பணிவாக பேசு(இரு)
பெரியவரிடம் தைரியமாக பேசு
நீ நேர்மையானவனாக இருந்தால்!
அறியாத வயதில் நாம் தெரியாமல்           
செய்யும் காரியமும் பாவமே!

முடிந்த வரை நல்லதை நினை
நல்லதை பேசு
பேசுவதற்கு முன் யோசி
மோசமான குணமுடைய
நண்பர்களிடம் தாமரை இலை
தண்ணீர் போல வாழு
மற்றவர்களுக்கு  நல்லதொரு  முன்
 உதாரணமாக வாழ கற்றுக்கொள்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'