திங்கள், 14 பிப்ரவரி, 2011

மானத்தின் வித்தியாசம் !

மானம் என்பது என்னவோ ஒன்று தான்
அதனுடைய தன்மையோ பாலினத்தை பொருத்து,
நிகழும் இடத்தை பொருத்து, பார்க்கும் 
கண்களை பொருத்து மாறுபடும் என்பதே
அனைவரும் அறிந்த, அறியாத விஷயமாகும்.                  

மிக எளிதாக எல்லோராலும் ஒரே மாதிரியான 
தீர்மானத்திற்கு வரக்கூடிய ஒன்று அதுதான் 
பெண்களின் நடை, உடைகளை வைத்தே
அவர்களின் தன்மையை கூறி விடுவது !

மாறாக ஆண்களுக்கு இது மாதிரியாக 
எளிதில் நடை, உடை, பாவனைகளை  வைத்து 
அவ்வளவு சீக்கிரம் அவர்களின் மான அவமானத்தை
எல்லோராலும் கணித்து கூறி விடமுடியாது !

காரணம் ஆண்களின் உடைகள்  அதிகபட்சம்
குறைந்து  கோவணமாக இருந்தாலும் சரி 
அதனால் அவனுடைய மானம் பறிபோவதில்லை
அதற்கு மாறாக அது உழைக்கும் வர்க்கத்தின்
உச்ச கட்டமான உழைப்பின் உயர்வை 
பிரதிபலிப்பதாகவே அமைந்து மெருகூட்டுகிறது !

ஆணினுடைய ஒவ்வொரு செயலையும் 
பொருத்து தான் அவனுடைய மான அவமானங்கள் 
மற்றவரால் ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்கப்படுகின்றன !
அவனுடைய மாறாத பேச்சு, எண்ணத்திலும் 
செய்கையிலும் நேர்மை, பிறருக்கு ஊர்(கேடு)
விளைவிக்காத தன்மை இன்னும் எவ்வளவோ 
சொல்லிக்கொண்டே போகலாம்...சுருங்கச்சொன்னால்
 
ஒருவன் நேர்மை தவறி தவறான வழியில் 
பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக வாழ்ந்தால் கூட
அவனை இந்த உலகம் மானத்தை விட்டு 
இவ்வளவையும் சம்பாதித்து  என்ன செய்ய 
போகிறான் என்று அவனை தூற்றும் ! 

நேருக்கு நேர் இல்லையென்றாலும் எல்லோராலும் 
மனதுக்குள்ளே அவனை பற்றி அவனை 
பார்க்கும் போதெல்லாம் இது மாதிரியான 
அபிப்ராயமே தோன்றும் என்பதில் ஐயமில்லை !

இந்த மாதிரியான எண்ணம் அவனுக்கே 
தோன்றும் என்பது தான் அதை விட 
வேடிக்கையான அவமானத்துக்குரிய ஒரு 
கேவலமான அற்புதமான மறுக்கமுடியாத உண்மையாகும் !

இப்படி மானத்தை விட்டு பணம் சம்பாரிப்பவர்கள் 
பூமியில் வாழும் போதே இறந்தவர்கள் என
மற்றவர்களால் மனதார போற்றப்பட்டு 
அவர்களை பார்க்கும் போதெல்லாம் 
ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்கள் 
அவர்கள் இப்பூவுலகை விட்டு செல்லும் வரை ...   ....  .....











4 கருத்துகள்:

b:if cond='data:post.embedCommentForm'