செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பாசவலை - வாழும் போதே ஒரு சொர்கம்

பாசம் பிரதிபலன் எதிர்பார்க்காதது! 
பாசம் எந்நிலையிலும் மோசம் செய்யாது
அப்படி மோசம் செய்தால் அது 
ஆத்மார்த்தமான பாசமாக இல்லாது 
ஒரு தலை பாசமாக இருந்து 
நாம் ஏமார்ந்ததையே குறிக்கும்.

பாசத்திற்கு ஏமாற்ற தெரியாது
நீரின் பாசம்(பாசி) எப்போதும் வழுக்கும்
மனித பாசம் எப்பொழுதும் வழுக்காது
உன்மீது பாசம் உள்ளவரிடம் நீயும் 
பாசத்தை வைத்துப்  பார் 
இந்த பாரினில் உன்னைவிட
சந்தோசமாக இருப்பவன் யாரும் கிடையாது !

பாசத்தின் உயரிய உன்னதத்தை 
சொல்லில் விவரிக்க முடியாது 
அது ஓர் அற்புதமான உள் உணர்வு !
உடன் பிறந்தோர் ஆணோ, பெண்ணோ 
நமக்கு கிடைத்ததற்கு நாம் 
புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அந்த புண்ணியத்தின் பலனை 
நம்மில் சில பேர் - மன்னிக்கவும் 
பல பேர் அதை பயன்படுத்த 
ம(ற)றுக்கின்றனர் காரணம் 
அச்சடித்த காகிதம்(பணம்) 
மேல் கொண்ட தீராத வெறித்தனமான
மோகம் தான் என்பதில் ஐயமில்லை !

உயிரற்ற,  நிலையில்லா பணத்தின் 
மேல் உள்ள பற்றை ஏன் நம்
இரத்த சொந்தமான உடன் பிறந்தோரிடம் 
வைக்க தயங்குகிறீர்கள். ஒரு நிமிடம் 
யோசித்து பாருங்கள் பணம் மட்டுமே 
வாழ்க்கை ஆகாது, உடன் பிறந்தோரை 
உங்களை விட அதிகமாக நேசியுங்கள்!

இதுவரை எப்படியோ இனியாவது
மனித வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்!
சொல்லி வருவதில்லை பாசம் 
பிறப்பிலேயே வரவேண்டிய ஒன்று.
பாசவலையில் விழுந்து பாருங்கள் 
வாழும் போதே சொர்கத்தை காண்பீர்கள் !!













 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'