ஞாயிறு, 3 ஜூன், 2012

தெ((பு)ரிந்து வாழுங்கள் மக்களே...



கண்ணிருந்தும் நற்காட்சியை காணாமல்

வாயிருந்தும் நல்வார்த்தை வராமல்

காதிருந்தும் நல்லதை கேட்கும் திறனில்லாமல்

கையிருந்தும் கொடை எண்ணமில்லாமல்

இரண்டு காலிருந்தும் நற்பாதை செல்லாமல்

நெஞ்சமிருந்தும் துளியும் ஈரமில்லாமல்

மனதிருந்தும் அதில் மனசாட்சியில்லாமல்

இத்தனையும் இருக்கும் இருந்தும் இல்லாமல்

இ(எ)ப்படி மனிதனாய் இருந்தும் இல்லாமல்

இருக்கும் இவர்களை என்னவென்று சொல்லாமல்

எனக்கென்னவென்று எல்லோரும் போவதால்

இந்த ஜென்மங்கள் நம்மோடு இருப்பது மட்டுமல்லாமல்

கூனிக்குறுகி இருந்து ஒருசேர கூடி வாழாமல்

தலைக்கணம் கொண்டு வாழத்தான் செய்கிறார்கள்....

என்னவென்று சொல்வது இந்த அநியாய நிலைமையை...

என்று மாறுமோ இந்த அவல நிலை இந்த அவணியில்....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'