வியாழன், 10 பிப்ரவரி, 2011

வேண்டும், வேண்டா - ஆமைகள்

பிறப்பிலே நல் பிறவாமை  வேண்டா 
பெற்றோரை எந்நிலையிலும் மறக்காமை  வேண்டும்
இளமையில் கல்லாமை இல்லாமை  வேண்டும்
அதிலும் இடைவெளி இல்லாமை  வேண்டும்
படிப்பில் போட்டி வேண்டும் பொறாமை  வேண்டா

பெரியவர் தம் சொல்தனை தட்டாமை  வேண்டும்  
டன் பிறந்தோரை  கவனிக்காமை  வேண்டா
உண்மை நண்பனை தேர்ந்தெடுக்காமை  வேண்டா
கொள்கையில் என்றும் அடிபிறழாமை  வேண்டும்
கடந்து வந்த வாழ்வுதனை மறவாமை  வேண்டும்

அந்தஸ்தில் உயர்ந்தாலும் செருக்கில்லாமை  வேண்டும்
சொல்லில் வாக்கு தவறாமை  வேண்டும்
தவறினால் பூமியில் உயிர் வாழாமை  வேண்டும்
மதியாதார் மனை தனை மிதியாமை  வேண்டும்
பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுக்காமை  வேண்டா

யார் தடுத்தாலும் கடமையை செய்ய தயங்காமை  வேண்டும் 
பிற(ர்) மாதரை கனவிலும் நினையாமை  வேண்டும்
பணத்தின் மேல் வெறித்தனமான பற்றாமை  வேண்டும்
அதன்(பணம்) பொருட்டு நேர்மை மாறாமை  வேண்டும்
செல்வமிருந்தும் கொடுக்காமை  எனும் பண்பு வேண்டா

 
தற் புகழ்ச்சியை என்றுமே விரும்பாமை  வேண்டும் 
பிற உயிருக்காக சிறிதேனும் கலங்காமை  வேண்டா
சுய நலத்தை மட்டுமே எண்ணாமை  வேண்டும்
யார் சொன்னாலும் புகை பிடித்தல் பிடிக்காமை  வேண்டும்
நாள்தோறும்(விரும்பினால்)  கடவுளை வணங்காமை  வேண்டா

வஞ்சகர்களின் போலியான பேச்சுக்கு மயங்காமை  வேண்டும்
மது பானங்களை எப்போதுமே அருந்தாமை  வேண்டும்
பகைவனுக்கும் கூட நம்பிக்கை துரோகம் செய்யாமை  வேண்டும்
யாரிடமும் மற்றவரை புறங்கூறி திரியாமை  வேண்டும்
நம்மூருக்கு தீர்ப்பை தள்ளிவைக்காத நாட்டாமை  வேண்டும் ..

3 கருத்துகள்:

  1. அல்லா ஆமைகளும் சூப்பர் ஆமைகள். நம்க்கு வோணுன்கிற ஆமையை வச்சுக்கிட்டு வோனான்கிற ஆமையை விட்டுடனும். என்னா நான் சொல்றது கரிக்கிட்டு தானே !

    பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'