வியாழன், 27 செப்டம்பர், 2012

தாயின் கடிதம்...





என் அன்பு மகனே..

நீ நலமாக இருக்கிறாயா
  உன்
குடும்பம் மற்றும் சகலசொந்தங்களோடு 

அனைத்து வசதிகளோடும் உனக்கு சொந்தமான வீட்டில்...


நானும் இங்கு நலமே

நீ விட்டுச் சென்ற முதியோர்
விடுதியில்
எனை போன்ற அன்னையர்களோடு...

உன்னை பற்றிய அக்கறை

எனை பற்றியது இன்று நேற்றல்ல 

நீ என் வயிற்றில் கருவானதிலிருந்தே...


இப்போதும் உன் கவலையே

அனுதினமும் வாட்டி எடுக்கிறது

எல்லோரும் உன்னை வசை பாடுவதால்...


பெற்றோர்களை கவனிக்காத

பாவியென்று மற்றவர்கள் உன்னை

பேசுவதால் என் உள்ளம் பதைக்குதடா...


இனியும் யாராவது கேட்டால்
நான் இறந்து விட்டதாக சொல்லிவிடு
இறப்பது என்பது எனக்கொன்றும் இது முதலல்லவே....

எப்போது எனை வெறுத்தாயோ

அப்போதே நான் இறந்துவிட்டேன்
இப்போது இருப்பது வெறும் கூடுமட்டும் தானடா...

என் பேரப்பிள்ளைக்காவது இந்த

ஆண்டவன் நல்புத்தியை கொடுத்து
மனிதனாக இருக்க அருள் புரியவேண்டுகிறேன்...

காரணம் நான் பெற்ற மகனுக்கும்
எனை போன்ற ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாதே என்ற ஒரு அக்கறையில் தான்...

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு

நொடியும் என் அடிவயிறு பற்றி எரிவது
எனக்கு மட்டும்தான் தெரியும் என் அன்புச்செல்லமே...

என்ன பாவம் நான் செய்தேனோ 

இப்பிறவியில் உன்னோடு இருக்கும் பாக்கியத்தை
இழந்துவிட்டேன் அடுத்த ஜென்மத்திலாவது கொடுப்பாயா...

ஆசை மகனே நான் இறந்த பிறகு

உன்னை சுமந்த வயிற்றில் வைத்துவிடு தீயை
அப்படியாவது உன் கோபம் தீருமா என்மேல் எனப்பார்ப்போம்...

ஏதுமறியா என் அப்பாவிமகனே

நான் இறப்பதற்காக வருந்தவில்லையடா பொல்லாத
உலகில் உனைவிட்டு செல்கின்றேனே என்ற கவலைதான்... 


***************************************************************




0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'