புதன், 19 ஜனவரி, 2011

இ(எ)ப்படியும் பேசலாமா !

பெற்றோர்கள்  தன் குழந்தைகளுக்காக 
செய்யும் அனைத்து காரியங்களும்
வளர்ப்பில் இருந்து அவர்கள்
சுயமாக சம்பாரிக்கும் வரை
தான் குழந்தைகளுக்காக ஆற்றும்
எல்லா செயல்களும் அதை
கடமை என்று வைத்துக்கொண்டாலும் சரி!

பெற்றோர்கள் எந்த காலக்கட்டத்திலும்
எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் யாரிடமும்
தாம் தன் குழந்தைகளுக்கு
செய்த எந்த செயலையும்
அதாவது நான் என் குழந்தைகளுக்கு
இதை செய்தேன் அதை செய்தேன்
என்று  சொல்வதில்லை, அவர்களுக்கு
அதை பற்றிய சிந்தனை
ஒரு துளி கூட தன் சிந்தையில்
இருக்கவே இருக்காது.

ஆனால் எல்லா பெற்றோர்களும்
தன் குழந்தைகளுக்காக பட்ட
கஷ்டங்கள் சொன்னால் எண்ணில்
அடங்காது இதை கஷ்டம் என்று
நான் தான் சொல்கிறேன்
பெற்றோர்கள் எப்போதும் இந்த
வார்த்தையை பயன்படுத்தமாட்டார்கள்.


தற்போது உள்ள இந்த கலியுகத்திலோ
குழந்தைகளாக பிறந்து பெரியவர்களாக
இருக்கும் நல்லவர்கள் வல்லவர்கள்
தன்னுடைய பெற்றோர்களுக்கு செய்யும்
சேவைகளை பிறரிடம் ஒரு சில பேர்                                    
சொல்வது அல்லது எவன் ஒருவன்
தன் பெற்றோருக்கு செய்கின்றானோ
அவனை பாராட்டி பேசுவது
இந்த இரண்டு செயல்களையும்
கேட்கும் பொழுது மனதிற்கு
மிகவும் வேதனையளிக்கிறது.

தயவு கூர்ந்து பெற்றோர்களுக்கு
சேவை செய்யும் செயலை பற்றி
எவர் ஒருவரும் பேசி
பெற்ற தெய்வங்களான தாய்,
தந்தையை இழிவு படுத்த வேண்டாம்.
இதுவே பெற்றோர்களுக்கு அவர்கள்
ஆற்றும் பேருதவியாகும்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'