புதன், 26 ஜனவரி, 2011

இது தா(னே)னா உலகம்!

மக்களின் மனம் பொதுவாகவே 
மேலோட்டமாக பார்த்து முடிவு 
எடுப்பது, ஆழ்ந்த சிந்தனை இல்லாது 
கண்ணால் பார்ப்பதை மட்டுமே 
கண்டு வியப்பில் ஆழ்ந்து 
மன மகிழ்ச்சி அடையும் தன்மையுள்ளவர்கள்!

எடுத்துக்காட்டுக்கு உலகத்திலேயே 
துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடம் 
எவ்வளவு உயரம் என்றே எல்லோரும்
வியந்து மேல்நோக்கி பார்க்கின்றனர்
யாராவது அந்த கட்டிடத்தின் உயரத்திற்கு 
எவ்வளவு அடித்தளம் போட்டிருப்பார்கள் 
என்று எண்ணி பார்த்தது உண்டா!

இப்போதுள்ள நாட்டு நடப்பும் இதுதான் 
எவன் ஒருவன் பிறர் முன்னேற்றத்திற்கு
பாடுபடுகின்றானோ அவன் ஏணி 
போல நின்ற இடத்திலேயே காலம் 
முழுவதும் நின்று தான் முன்னேறாமல் 
கடைசி வரை யாருக்கும் தெரியாமலேயே 
மண்ணுக்குள் மறைந்து விடுவதுண்டு!




0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'