புதன், 26 ஜனவரி, 2011

வியர்வையின் வாசனை !!

கருங்கல்லே உனக்கு வலிக்கும் என்று
நான் நினைத்திருந்தால் நீ இப்படி (உதாரணத்திற்கு)
கன்னியாகுமரியிலே பார் போற்றும்
ஐயன் வள்ளுவனாக கம்பீரமாக நின்று
காட்சி கொடுத்திருக்க மாட்டாய்!                          

உனக்கு எவ்வளவு வலி இருந்ததோ                 
அதே வேதனை என் கைகளுக்கும்
ஏற்பட்டிருக்கும் என்பதை ஏன் எண்ணி
பார்க்க மறந்தாய்! உன்னை அறிமுகப்படுத்துவதற்கு
நான் என் முகவரியை தினம் தினம்
மறந்த நாட்கள் அதிகமுண்டு!                            


உயிரற்ற உனக்கு உயிர் கொடுக்க
என் உயிர் மெய் அனைத்தையும்
வருத்தி உன்னை உருவாக்கினேன்.
உன் காலடியில் நான் நின்று அன்னாந்து
உனை பார்க்கும் போது தான் நான்
என்  உ(வி)யர்வை  எண்ணி மகிழ்கின்றேன் !




0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'